கொரோனாவால் வேலையிழந்து அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கு தலா ரூ. 10 லட்சத்தை இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் நன்கொடையாக வழங்கிதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது . அதில் முக்கியமாக இசை கலைஞர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் மூலம் 100 இசைக்கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக மேடை கச்சேரிகளும், பட வாய்ப்புகளும் இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர் இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட இசை கலைஞர்களுக்கு ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் இளையராஜா அவர்கள் நன்கொடை வழங்கி உதவியதாக கூறப்படுகிறது. ஆம் தலா ரூ. 10 லட்சம் வீதம் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் இளையராஜா நன்கொடை வழங்கியதாக திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தலைவரான தீனா தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட இசை கலைஞர்களுக்கு டி. இமான், ஹிப்ஹாப் ஆதி, மற்றும் அனிருத் ஆகியோர் தலா 3 லட்சமும், தமன் அவர்கள் 1 லட்சமும், விஜய் ஆண்டனி மற்றும் ஜிப்ரான் அவர்கள் தலா ரூ. 50,000வீதமும் நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிடைத்த பணத்தில் தலா ரூ. 2000வீதம் ஒவ்வோரு இசை கலைஞர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…