தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், அதிபர் டொனால்டுட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்.
அமெரிக்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இவரது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட ட்வீட்டர் பக்கமான @realtonaldtrump பக்கத்தில் இருந்து சில ட்வீட்டுகள் செய்திருந்தார். இந்த ட்வீட்டுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால், அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. மேலும், விதிமுறைகளை மீறியதற்காக அவரது டுவிட்டர் பக்கத்தை ட்வீட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்குவதாக அறிவித்தது.
டொனால்ட் டிரம்ப் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.இதனால் முதலில் 24 மணி நேரத்திற்கு முடக்கப்பட்ட பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் பின்பு காலவரையின்றி தடை செய்ய வாய்ப்புள்ளது என பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தார்.
இந்நிலையில்,தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது .இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிறுவனம் @realtonaldtrump என்ற பக்கத்தில் வரும் ட்விட்கள் வன்முறையை மேலும் தூண்டும் விதமாக உள்ள அபாயத்தின் காரணமாக கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
வன்முறையைத் தூண்டுவதற்கு ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது என்பதையும் பல ஆண்டுகளுக்குப் முன் தெளிவுபடுத்தினோம். எங்கள் கொள்கைகள் மற்றும் அவற்றை அமல்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து வெளிப்படையாக இருப்போம் என்று ட்விட்டர் விளக்கமளித்துள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…