அவர்களை விட நான் தான் இந்தியாவின் நண்பன்.! மோடி மிக சிறந்த மனிதர்.! டொனால்ட் டிரம்ப் புகழாரம்.!

Default Image

முந்தைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை விட நான் தான் இந்தியாவின் சிறந்த நண்பன். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி. 

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அமெரிக்க தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் இந்தியாயவுடனான உறவு குறித்தும் பேசியிருந்தார்.

அப்போது கூறுகையில், இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் நல்ல நட்புறவு இருக்கிறது. முந்தைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை விட நான் தான் இந்தியாவின் சிறந்த நண்பன். ‘ என பேசியிருந்தார்.

மேலும் பேசிய டிரம்ப், ‘ நான் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும். என மக்கள் விரும்புகிறார்கள். அது குறித்து ஆலோசித்து வருகிறேன். விரைவில் அதுபற்றியும் அறிவிப்பேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்