டிரம்ப் ஒருபோதும் அதிபர் பதவியை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை – ஒபாமா

Default Image

டிரம்ப் ஒருபோதும் அதிபர் பதவியை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை  என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது.ஓன்று ஜனநாயக கட்சி,மற்றொன்று குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.மேலும் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்தியாவை பூர்விகமாக  கொண்டவர் ஆவார் .

கமலாவை  அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அறிமுகம் செய்து வைத்தார்.இதன் பின்னர் அவர் பேசுகையில், டிரம்ப் ஒருபோதும் அதிபர் பதவியை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. டிரம்ப்  அமெரிக்கா மீது மோசமான தூண்டுதல்களை கட்டவிழ்த்து விட்டுவிட்டார். உலகெங்கிலும்அமெரிக்காவிற்கு கிடைத்த பெருமை  குறைந்துவிட்டது.மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் ஜனநாயக அமைப்புகள் அச்சுறுத்தலை சந்தித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்