4 நாட்களாக எஜமானருக்காக காத்திருக்கும் நாய்..நடந்தது என்ன ?

Default Image

சீனாவில் தன்னை வளர்த்து உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் அவருக்காக அவர் வளர்த்த  நாய் நான்கு நாட்களாக பாலம் ஒன்றில் காத்திருந்த புகைபடம் வீடியோ வெளியாகியுள்ளது.

சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஒரு பாலத்தில் இருக்கும் நதியில் ஒருவர் கடந்த மாதம் அந்த குதித்து தற்கொலை செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது, அந்த ஆற்றில் குதிக்கும் அவர் தன்னுடைய நாயே அழைத்து வந்துள்ளார். இதனை கவனித்த விசுவாசமான அந்த நாய் அவர் வருவார் என்று கடந்த 4 நாட்களாக அதே இடத்தில் தனியாக படுத்து காத்திருக்கிறது. இதை அந்த வழியே சென்ற நபர்கள் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்கள் அதில் ஒருவர் தத்து எடுக்க விரும்பினார் ஆனால் அந்த நாய் அவரிடம் சிக்காமல் ஓடியது.

இதை பற்றி சிறு விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இயக்குனர் சொல்லும் பொழுது மக்கள் அந்த நாய்க்கு உதவும் போது அது பயத்தோடு ஓடியது. ஆனால், அது ஒரு உண்மையான உரிமையாளரே தேடி கொண்டிருக்கும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen