முத்தமிடுவது சாதாரணமாக மனிதர்களாகிய நாம் அனைவருமே செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் உதட்டில் முத்தமிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முத்தமிடுவது என்பது உலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களுமே செய்யக்கூடிய ஒன்று தான். தங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கு உதட்டில் முத்தமிடுவது வழக்கம். ஆனால் நாம் முத்தமிடுவது தவறல்ல, யாருக்கு முத்தம் இடுகிறோம் என்பதில் தான் கேள்வி எழும்புகிறது. அதாவது நோய் வாய்ப்பட்ட ஒருவரையோ அல்லது பாக்டீரியா தாக்கிய ஒருவரை நாம் முத்தமிடும் போது அதன் விளைவாக நமக்கு பல்வேறு நோய்களும் ஏற்பட காரணமாகிறது. முத்தமிடுவதன் விளைவாக ரத்த அழுத்தம் குறைவது, கலோரிகள் குறைவு, தலைவலி குணமாதல் மற்றும் மூளையில் உள்ள ரசாயனங்கள் அதிகரித்து நமக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பது நாம் அறிந்ததுதான்.
ஆனால் இந்த முத்தமிடுவதன் மூலம் நமக்கு சில தீமைகளும் நடக்கும். சில சமயங்களில் உதட்டில் முத்தம் கொடுக்கும் பொழுது சிறிய அளவிலான பாக்டீரியாக்கள் எச்சிலில் இருந்து நமக்கு பரவுவதன் மூலம் குளிர் காய்ச்சல் ஏற்பட காரணமாகிறது. இதன் அறிகுறியாக சளி, தலைவலி மற்றும் தொண்டை புண் ஆகியவை ஏற்படும். அடுத்ததாக வாயை சுற்றிலும் ஏற்படக்கூடிய பனிப்படலம் போன்ற புண் அல்லது உதட்டுப்புண் ஆகியவை ஏற்படலாம். இதுவும் பாக்டீரியாக்கள் காரணமாகத்தான் ஏற்படுகிறது.
அடுத்தது மிக அதிகமான ஆபத்து தரக்கூடிய பாக்டீரியா. இது மூளைக்காய்ச்சல் உருவாக்கக்கூடியது. இது முத்தத்தின் மூலமாக தான் பரவுகிறது என கூறப்படுகிறது. இதன் மூலம் கழுத்து வலி, காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும், நமது பற்களின் மேல் பரப்பில் இருக்கக்கூடிய சதைகளிலும் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே நாம் முத்தமிடுவது தவறல்ல நாம் முத்தமிட கூடிய நபர் நமது வாழ்க்கை துணையாக இருந்தாலும் பாதுகாப்புடன் இருப்பதும் சுத்தமாக இருப்பது அவசியம்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…