குறிப்பிட்ட வயதை கடக்கும் பொழுது அனைவருக்குமே கால்களில் பித்தவெடிப்பு ஏற்படுவது வழக்கம். குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்த வெடிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. இது உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படக்கூடிய ஒன்று. ஆனால், இந்த பித்த வெடிப்புகள் ஏற்பட்டால் கால்கள் பார்ப்பதற்கு சற்று மோசமாக இருப்பதுடன், நாம் விரும்பிய காலணிகளை கூட நம்மால் அணிய முடியாது. எனவே இயற்கையான முறையில் இந்த பித்த வெடிப்புகளை நீக்குவதற்கான சில வழிமுறைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஈரப்பதம் இன்றி வறட்சியாக காணப்படுவது கூடியதே பித்த வெடிப்புக்கு காரணம். இந்நிலையில், இந்த வறட்சித் தன்மையைப் போக்கி பாதங்களை எப்போதும் மென்மையாக வைத்திருப்பதற்காக நாம் தினமும் நமது குதிகால்களில் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவிக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இரவு தூங்கும் பொழுது ஏதேனும் ஒரு எண்ணெயை வைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசிவிட்டு படுக்கும்பொழுது விரைவில் பித்த வெடிப்புகள் நீங்கும்.
மேலும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து அதில் உங்கள் பாதங்களை 10 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு தேங்காய் நார் அல்லது ஸ்கரப் செய்யும் கல் வைத்து பாதங்களை நன்கு தேய்த்து கழுவினாலும் பாதங்கள் மென்மையாக அழுக்கின்றி பித்த வெடிப்பு நீங்கி காணப்படும். மேலும் ஒரு சிறு கிண்ணத்தில் கோதுமை மாவு அரிசி மாவு இரண்டையும் கலந்து எடுத்துக் கொண்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து லேசாக தேன் விட்டு கிளறி கொள்ளவும்.
இந்த கலவையை காலில் பேஸ்ட் போல தடவி வர ஒரு வாரத்தில் உங்கள் கால்களில் உள்ள பித்த வெடிப்புகள் மறைவதை நீங்களே காணலாம். சிலர் வீடுகளில் டைல்ஸ் இருக்கும். இந்த டைல்ஸில் நாம் அடிக்கடி நடப்பதால் கூட நமது பாதங்களில் பித்த வெடிப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே வீட்டுக்குள்ளேயே அணிய கூடிய காலணிகளை உபயோகிப்பதன் மூலம் இந்த பாதிப்புகளை தவிர்க்கலாம்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…