பல பெண்கள் நீண்ட அடர்த்தியான தலைமுடி தங்களுக்கும் இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். அதிலும் சில பெண்கள் தங்களது முடி பளபளப்பாக நேராக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்காக பார்லருக்கு சென்று ரசாயனங்களை பயன்படுத்தி முடியை நேராக மாற்றிக்கொள்வார்கள்.
இதனால் பணமும் அதிக அளவில் செலவாகும், நமது முடியும் நாளடைவில் சேதம் ஆகிவிடும். இன்று வீட்டிலேயே முடியை நேராக மாற்றக்கூடிய ஜெல் ஒன்றை தயாரித்து நாம் பயன்படுத்தலாம். எப்படி இந்த ஜெல்லை இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிப்பது என்பது குறித்தும், இதை உபயோகிக்கும் முறை குறித்தும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முதலில் ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் ஆளி விதைகளை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை கொதிக்க விடவும். அதன் பின்பு இந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். பின்பு இதனுடன் கற்றாலை ஜெல், தேன், எலுமிச்சை சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
முதலில் தலைமுடியை சற்று வெதுவெதுப்பான நீரால் ஈரப்படுத்திக் கொள்ளவும். அதன் பின்பு முடியை இரண்டு பகுதிகளாக பிரித்து, நடுவில் இருந்து இந்த ஜெல்லை தடவ ஆரம்பிக்க வேண்டும். நன்கு முடியின் வேர்கள் மற்றும் முனைகள் வரை பரவும்படி தடவிக் கொள்ளவும். இந்த ஜெல்லை தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து முடியை அலசி விடவும். அவ்வளவு தான், இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் முடி நேராக பளபளப்பாக மாறிவிடும்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…