ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு அந்த வகையில் மாதம் 8-ம் தேதி என்றால் நம் அனைவருடைய நினைவிற்கு முதலில் வருவது உலக மகளிர் தினம்.மார்ச் மாதத்தில் பல முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் வரும்.
ஆனால் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நம்முடைய நினைவிருக்கு முதலில் வருவதில்லை ஏனென்றால் நம் குடும்பத்தில் கண்டிப்பாக ஒரு பெண்கள் இருப்பார்கள் அதனால் உலக மகளிர் தினம் நம் நினைவிற்கு வருகிறது.
இந்த நாள் ஆண்கள் ஆதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள். சில வருடங்களுக்கு முன் “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என கூறி பெண்களை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டார்.இதனால் ஆண்கள் மட்டுமே வேலைக்கு சென்று வந்தார்கள்.பெண்கள் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்கள்.
பின்னர் காலம் செல்ல செல்ல ஆண்களை விட பெண்கள் முதலில் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். இதைத்தொடர்ந்து ஆண்களுக்கு இணையான வேலைகளை செய்ய தொடங்கினார்கள். ஆனால் தற்போது அனைத்து துறைகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிகமாக சாதனை செய்து வருகிறார்கள்.
இப்படி பல சாதனை செய்து வரும் பெண்களுக்கு நம் சமுதாயத்தில் முழுசுந்திரம் கிடைத்துஉள்ளதா..? என்ற கேள்வியை எழுப்பினால் இன்னும் முழு சுகந்திரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால் தற்போது உள்ள பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் சென்று வருகிறார்கள் .அவர்கள் செய்யும் வேலை கண்டிப்பாக ஆண்களுக்கு இணையாக இருக்கும் ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் குறைவுதான். அதுமட்டுமல்லாமல் வேலைக்கு சென்ற விட்டு வீடு திரும்பும் பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்கிறீர்கள்.
இதற்கு பெயர் பெண்கள் முழுசுகந்திரமா..? ஜா.நா சபையின் கூற்றுபடி உலகின் எந்த நாட்டிலும் வீட்டுவேலையில் பெண்கள் செலவிடும் நேரத்தில் ஒருபகுதி கூட ஆண்கள் செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு பெண் தினமும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த நவீன உலகத்தில் இன்னும் பாதுகாப்பு இல்லை . “பெண்கள் நம் நாட்டின் கண்கள்” என கூறுகிறோம். அப்படிப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு எவ்வளவு தான் முன்னேறினாலும் அது அதற்கு பெயர் முன்னேற்றம் கிடையாது.
ஆண்களுக்கு நிகரான சுதந்திரம் பெண்களுக்கு கிடைத்தால் தான் பெண்களுக்கான முழு சுதந்திரம். வருகின்ற 08 -ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.எனவே அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு தினசுவடு சார்பாக மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…