செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா …? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

Published by
Rebekal

தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது செரிமான கோளாறு. இந்த செரிமான பிரச்சனை ஏற்படும் பொழுது வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல சிரமமான அறிகுறிகளை பலரும் அனுபவித்து வருகின்றனர்.

அந்த வகையில் செரிமான பிரச்சனை எதற்காக ஏற்படுகிறது? நாம் சில  செயல்களை தவறான முறையில் செய்யும் பொழுது இந்த செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நமது உணவும், வாழ்க்கை முறையும் தான்.

சில சமயங்களில் நாம் அறியாமல் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு முறைகள் நமது செரிமான அமைப்பை பெருமளவில் பாதித்து விடுகிறது. செரிமானம் பாதிப்பு ஏற்படுவதற்கான சில காரணங்கள் மற்றும் அவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

உணவுக்குப் பின் குளியல்

மருத்துவர்களின் கருத்துப்படி ஒவ்வொரு நபரும் உணவுக்கு பின் மற்றும் முன் செய்யக்கூடிய செயல்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒன்று உள்ளது. அந்த நேரத்தில் நாம் தவறாக நடந்து கொள்ளும் பொழுது நமது உள்ளுறுப்புகளில் சில பாதிப்புகள் ஏற்படலாம். உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் குளிக்கக் கூடாது என கூறப்படுகிறது.

நமது உணவை ஜீரணிக்க கூடிய உறுப்புகள் உஷ்ணம் உள்ளதாக இருக்குமாம். எனவே, அவை சாப்பிட்ட பின்பு தானாகவே செயல்படுமாம். ஆனால் நம் சாப்பிட்ட உடன் குளிக்கும் பொழுது, நமது உடலின் வெப்பநிலை குறைவதால் செரிமான அமைப்பும் மெதுவாக செயல்பட்டு செரிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

வேகமான நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி என்பது ஒரு நல்ல உடற்பயிற்சி என்று அனைவருமே அறிந்தது தான். ஆனால் சாப்பிட்டவுடன் வேகமாக நடப்பது நமது செரிமானத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது. அதாவது சாப்பிட்ட பின்பதாக நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வதோ, நீச்சல் பயிற்சிகள் மேற்கொள்வதோ நமது செரிமான அமைப்பை பாதிக்கும் என கூறப்படுகிறது. எனவே சாப்பிட்டு சில மணி நேரங்களுக்கு வேகமான நடைபயிற்சி எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறப்படுகிறது.

இரவில் தயிர் சாப்பிடுதல்

உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய ஒரு உணவு. ஆனால், தயிரை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகள் உள்ளது. இது தொடர்பாக கூறும் மருத்துவர்கள் தயிர் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை உள்ளதால் இவை உடலில் பித்தம் மற்றும் வாத தோஷத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவது நமது செரிமான மண்டலத்தை பாதித்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

Recent Posts

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

21 minutes ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

2 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

3 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

3 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

4 hours ago

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

5 hours ago