சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள் இவர்களா..?

Default Image

சார்பட்டா பரம்பரை கதையை இயக்குனர் பா.ரஞ்சித் ஆர்யாவிடம் கூறுவதற்கு முன்பு சூர்யா மற்றும் கார்த்தியிடம் கூறியுள்ளதாக தகவல்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 22- ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது.

திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக உள்ளதாக கருத்துக்களை கூறிவருகின்றார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறிவருகின்றார்கள்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் பா.ரஞ்சித் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்குவதற்கு முன்பே “சார்பட்டா பரம்பரை” படத்தின் கதையை கார்த்தியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் சம்மதம் தெரிவிக்காததால் மெட்ராஸ் கதையயை கூறி பின் படம் உருவாகியுள்ளது.

அதன்பிறகு, கபாலி, காலா, படங்களை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் சூர்யாவிடம் சார்பட்டா பரம்பரை கதையை கூறியுள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்காததால் இறுதியாக பா.ரஞ்சித் ஆர்யாவிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரும் கடினமாக முயற்சி செய்து உடலமைப்பை மாற்றி நடித்துள்ளார். படமும் எதிர்பாராத்த நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்