தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

Default Image

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

இயக்குனர், சீனுராம சாமி இயக்கத்தில் கடந்த 2010 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று. படத்தில் நாயகனாக விஜய்சேதுபதியும், நாயகியாக வசுந்தரா காஷ்யப் நடித்திருந்தார்கள். கிராம பக்கத்தில் வைத்து எடுக்கபட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தேசிய விருதை வென்றது.

இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருந்தார். படத்தில் சரண்யா, அருள்தாஸ், காதல் சுகுமார், போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில், இப்படித்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது பாய்ஸ் படத்தில் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மணிகண்டன் தான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதலில் நடிக்க இருந்தாராம் சில காரணங்களால் அவரால் படத்தில் நடிக்க முடியாமல் போக அடுத்ததாக விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததும் அவர் நடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்