புராணம் சம்பந்தப்பட்ட கதையில் சூர்யா…. இயக்குனர் யார் தெரியுமா..?

Default Image

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 40 ஆவது படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வாடிவாசல், அருவா, திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா புராணம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை வெயில், அங்காடி தெரு, ஜெயில், காவிய தலைவன் போன்ற படங்களை இயக்கிய வசந்த பாலன் இயக்கவுள்ளாராம். ஆம் சமீபத்தில் இயக்குனர் வசந்த பாலன் சூர்யாவை சந்தித்து புராணம் சம்பந்தப்பட்ட கதை ஒன்றை கூறியுள்ளாராம் அந்த கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது என்பதால் வரும்காலத்தில் பண்ணலாம் என்று கூறியுள்ளாராம்.

மேலும் இதனை தொடர்ந்து இயக்குனர் வசந்த பாலன் நடிகர் அர்ஜுன் தாஸை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்