‘பொன்னியின் செல்வன் ‘படப்பிடிப்பு எப்போது தெரியுமா.?

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்திற்குள் இலங்கையில் வைத்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது . ஊரடங்கிற்கு முன்பு இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் புதுவையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் மற்றும் நிழல்கள் ரவி இணைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
சமீபத்தில் படப்பிடிப்புகள் நடத்த அரசு கட்டுபாட்டுகளுடன் கூடிய அனுமதி அளித்ததை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்திற்குள் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், இலங்கையில் வைத்து சில காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும், அங்கு கொரோனா பாதிப்பு கட்டுபாட்டுக்குள் இருப்பதால் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், அதன் பின்னர் தான் சென்னையில் ஷூட்டிங்கை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025