ஆர்யாவின் சல்பேட்டா படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சென்னையில் வைத்து நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ஆர்யா, அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சல்பேட்டா’ என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். பா. ரஞ்சித் அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். இந்த படம் ஒரு வடக்கு சென்னை குத்து சண்டை வீரர்களை மையமாக கொண்டு உருவாகும் படமாகும். இதில் ஆர்யா குத்து சண்டை வீரராக களமிறங்குகிறார். அதற்காக ஆர்யா தனது உடலை ஃபிட்டாக மாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த படத்தின் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்கவுள்ளார். இதில் அவர் ஒரு தைரியமான வடக்கு சென்னை பெண்ணாக காட்சியளிக்கிறார். இவர் கடந்தாண்டு வெளியான “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சென்னையில் வைத்து நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…