நடிகர் தனுஷ் நடிப்பில் ராட்சசன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு “வால் நட்சத்திரம்” என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்கவுள்ளார் .அதன் பின் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் அவர்களின் படத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் அறிவிப்பு ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பின் ராம்குமார் அறிவித்திருந்தார்.இதன் ஆரம்ப பணிகள் கடந்த ஆண்டிலிருந்து நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது . சமீபத்தில் தனுஷ்-ராம்குமார் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி பதிப்பிலும் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக,அதாவது இந்த படத்தை பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்திற்கு “வால் நட்சத்திரம்” என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சயின்டிஃபிக் திரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…