தல அஜித்தின் ‘ஆசை’ படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் என்ன தெரியுமா.?

Default Image

தல அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்திற்கு முதலில் ‘பூவெல்லாம் கேட்டுபார்’ என்று தான் இயக்குநர் டைட்டில் வைத்ததாக கூறப்படுகிறது.

தல அஜித் குமார் அவர்களின் திரைப்பயண வாழ்க்கையில் முதல் சூப்பர் ஹிட் படம் என்றால் அது ‘ஆசை’ தான். அஜித்துடன் பிரகாஷ் ராஜ், சுவலெட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள் இயக்கத்தில் வஸந்த் இயக்கத்தில் உருவான இந்த காதல் நிறைந்த திரில்லர் திரைப்படம் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் வாழ்க்கையிலும் முக்கியமான படமாக அமைந்தது. இந்த நிலையில் இன்று ஆசை திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிய நிலையில் முதல் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் வைத்த பெயர் வெளியாகியுள்ளது.

அதாவது இயக்குநர் வஸந்த் இந்த படத்திற்கான கதையை எழுதுகையில் ‘பூவெல்லாம் கேட்டுபார்’ என்ற டைட்டிலை தான் வைத்தாராம். அதனையடுத்து ‘கண்ணே’ என்று மாற்றியுள்ளார். அதன் பின்னர் தான் ஹீரோ மற்றும் வில்லனின் கதாபாத்திரத்தை வைத்து ‘ஆசை’ என்று டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்