பாயாசம் என்றாலே பெரும்பாலும் பலருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பாயசம் பிடிக்கும். இந்த பாயசத்தில் ரவை பாயாசம், சேமியா பாயாசம், பால் பாயாசம், பருப்புபாயாசம் என பல வகையுண்டு. அதிலும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கேரளா ஸ்பெஷல் இளநீர் பாயசம் மிகவும் அட்டகாசமாக இருக்கும். உஷ்ணம் அதிகமுள்ள இந்த நேரத்தில் நாம் எப்படி இந்த பாயசத்தை வீட்டில் தயாரிப்பது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக நாம் எடுத்து வைத்துள்ள இளநீர் வழுக்கையை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அவற்றை ஒரு கைப்பிடி அளவு தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மற்றதை சர்க்கரையுடன் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக விழுது போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின் ஒரு தனி பாத்திரத்தில் பசும் பாலை ஊற்றி, பாதியாக குறையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அரைத்து வைத்துள்ள இளநீர் விழுதை பாலுடன் சேர்த்து ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதன் பின்பு தேங்காய் பாலை இதனுடன் கலந்து விட்டு, உடனடியாக இறக்கி விடவும். பின் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை இதனுடன் கலந்து எடுத்து வைத்துள்ள ஒரு கைப்பிடி இளநீர் வழுக்கை துண்டுகளையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது அட்டகாசமான இளநீர் பாயசம் வீட்டிலேயே தயார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…