அட்டகாசமான வெண்ணெய் புட்டு செய்வது எப்படி தெரியுமா…?

Published by
Rebekal

காலை நேரத்தில் ஏதாவது தினமும் வித்தியாசமானதாக செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். அதற்காக தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என செய்ததையே செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, புதிதாக ஏதாவது ஒன்று செய்தால் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இன்று எப்படி வெண்ணெய் புட்டு செய்வது என்பது குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • புழுங்கல் அரிசி
  • கடலைப்பருப்பு
  • வெல்லம்
  • தேங்காய்த் துருவல்
  • முந்திரி
  • ஏலக்காய்
  • நெய்
  • உப்பு

செய்முறை

அரைக்க : முதலில் புழுங்கல் அரிசி 2 கப் எடுத்து இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு இதை நைஸாக அரைத்துக் கொள்ளவும். அது போல கடலை பருப்பை ஊறவைத்து அவித்து கொள்ளவும்.

கலவை : ஒரு கப் அரிசி மாவுக்கு ஒரு கப் என்ற அளவில் நீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அரிசி மாவுடன் உப்பு சேர்த்து வெந்நீரில் மாவை கொட்டி நன்றாக கிளறவும். வெந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை இதனுடன் சேர்க்கவும். அதன்பின் வெல்லப் பாகு தயாரித்து அதையும் மாவுடன் கலந்து கொள்ளவும்.

புட்டு : நெய்யில் முந்திரி மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் நாம் கிளறி வைத்துள்ள மாவையும் சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் சேர்த்து கெட்டியாக வரும் வரை நன்கு கிளறவும். வெண்ணெய் போல திரண்டு வந்ததும், ஒரு தட்டில் போட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான வெண்ணெய் புட்டு தயார்.

Published by
Rebekal

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

8 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

10 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

11 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

13 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

13 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

14 hours ago