இதய நோயாளிகளுக்கேற்ற ப்ராக்கோலி சூப் செய்வது எப்படி தெரியுமா…?

Published by
Rebekal

சாதாரணமாகவே ப்ராக்கோலி அதிக சத்துக்கள் கொண்டது. எனவே, அனைவரும் உணவில் இதை எடுத்து கொள்ளலாம். குறிப்பாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ராக்கோலி சூப் ஒரு நல்ல உணவாகும். இந்த ப்ராக்கோலி சூப் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • ப்ராக்கோலி
  • இஞ்சி
  • பூண்டு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி
  • புதினா
  • மிளகுத்தூள்
  • துளசி இலை
  • எலுமிச்சை பழம்
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி

செய்முறை

முதலில் குக்கரில் தக்காளி, ப்ராக்கோலி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, உப்பு, பட்டை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்துவிடவேண்டும்.

குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும். ஆவி அடங்கியதும் குக்கர் மூடியைத் திறந்து நன்றாக கடைய வேண்டும். அதன் பின் இதனுடன் வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இளம் சூடாக பருக வேண்டும்.

பயன்கள்

ப்ராக்கோலியில்  அதிகளவு வைட்டமின் சி சத்து உள்ளது. எனவே இது மூளையின் திறனை அதிகரிக்க உதவுவதுடன் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தவிர்க்கவும் உதவுகிறது. மேலும் நினைவாற்றலை தக்க வைக்க உதவ கூடிய ப்ரோக்கோலி, உடலில் ரத்த ஓட்டம் தடையின்றி நடைபெறவும் உதவுகிறது. மேலும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும் இது உதவுகிறது.

இந்த ப்ராக்கோலி சூப் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தடுக்கவும் இது உதவுகிறது. இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளதால் இதயம் வலிமை பெற உதவுவதுடன் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதையும் தடுக்கிறது. மேலும் இதிலுள்ள கால்சியம் மற்றும் நார்சத்து காரணமாக மலச்சிக்கலைத் தடுக்கவும் இது உதவுகிறது.

Published by
Rebekal

Recent Posts

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

38 minutes ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

14 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

15 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

16 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

18 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

19 hours ago