சேமியா பலருக்கும் பிடித்த ஒரு உணவு தான். சேமியாவில் எப்பொழுதுமே காய்கறிகளைப் போட்டு விரவி சாப்பிட்டிருப்போம். வெங்காயம் தக்காளியுடன் வதக்கி சாப்பிட்டிருப்போம். வெறும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து சாப்பிட்டிருப்போம். ஆனால், இந்த சேமியாவில் அட்டகாசமான பிரியாணி எப்படி செய்வது என்று தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.
முதலில் சேமியாவை ஒரு கடாயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், பட்டை ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தாளிக்கவும். தக்காளி லேசாக வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் இவற்றுடன் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றவேண்டும். இதனுடன் லேசாக மிளகாய் தூளும் கலந்து கொள்ள வேண்டும். அதன்பின் மல்லி மற்றும் புதினா சேர்த்து இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். பின் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை நீங்கியதும் லேசாக எலுமிச்சை சாறு ஊற்றி சேமியாவை அவித்து இதனுடன் கிளறவும். சிறிது நேரம் மிதமான தீயில் வைத்துக் கிளறி எடுத்தால் அட்டகாசமான சேமியா பிரியாணி தயார். இன்று காலை உணவுக்கு இதை செய்து பாருங்கள்.
சென்னை : இன்றயை கால இளைஞர்கள் மத்தியில் எந்த மாதிரி படத்தினை இயக்கி நடித்தால் க்ளிக் ஆகும் என பிரதீப்…
துபாய் : இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஒரு போட்டியில் மோதுகிறது என்றாலே அந்த போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு…
சென்னை : நடிகர் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கி தான் அரசியல் வருவதாக அறிவித்தார்.…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …