நித்தியகல்யாணி பூச்செடி என்றாலே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் மணம் பிறரை அருகில் செல்ல விடாமல் முகம் சுளிக்கும் வண்ணமாக இருக்கும். இதன் காரணமாக வெவ்வேறு பெயர்களாலும் அடைமொழி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தானாகவே வளரக்கூடிய இந்த நித்தியகல்யாணி செடி எவ்வளவு நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்துள்ளது என்பது குறித்து நமக்கே தெரிவதில்லை. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இந்த நித்தியகல்யாணி எனும் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் கொண்டதாக தான் இருக்கிறது. இதன் வேர், இலை, பூ ஆகிய அனைத்துமே மருத்துவத்தில் மிகவும் பயன் கொண்டதாக இருக்கிறது. நாவல் நிறம் அல்லது வெள்ளை நிறத்தில் அதிகம் காணப்பட கூடிய இந்த தாவரத்தின் பூக்கள் வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய இரத்த புற்றுநோயை எதிர்க்கக்கூடிய மருத்துவத் தன்மை கொண்டது. இது போன்ற ஒரு மிகச்சிறந்த ரத்தப் புற்றுநோயை எதிர்க்கக்கூடிய மருத்துவ பயன் கொண்ட தாவரம் இல்லை என்றே கூறலாம். மேலும் சிறுநீர் கற்களை அழிக்க உதவுவதுடன், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் தீர்வு அளிக்க உதவுகிறது. உடல் அசதிக்கு இனி மருந்து வாங்கி குடிக்க தேவையில்லை.
இந்த நித்தியகல்யாணி தாவரத்தில் உள்ள பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை விட்டுக் குடித்து வந்தாலே உடல் களைப்பு அனைத்தும் நீங்கிவிடும். மேலும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதிலும் இந்த தாவரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இதன் வேரை தூளாக்கி ஒரு சிட்டிகை அளவு சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது நீரிழிவு நோய் குணமாகிறது. இந்தச் செடியில் இருந்து எடுக்கப்பட கூடிய மூலப் பொருட்கள் மூலமாக புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. நாள்பட்ட புண் மற்றும் ஆழமான புண்களுக்கு கூட நித்தியகல்யாணி செடியின் இலைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலம் போல காய்ச்சி பூசி வரும் பொழுது நிச்சயம் அது முழுமையாக குணமடையும்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…