மாலை நேரங்களில் வீட்டில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது வடை இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்குமே வடை சாப்பிடுவது விருப்பம் தான். ஆனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டில் ஏதாவது செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இன்று வீட்டிலேயே கடலைப் பருப்பை வைத்து எப்படி மினி வடை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கடலைப்பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, உப்பு, எண்ணெய்.
முதலில் கடலைப்பருப்பை 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு பௌலில் அரைத்த கடலை மாவை கொட்டி, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து வைக்கவும்.
இந்த மாவை ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு, அதன் பின்பு சிறிய சிறிய உருண்டைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான கடலைப்பருப்பு மினி வடை தயார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…