எண்ணெய் சருமம் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்களா நீங்கள்…? இயற்கை முறையில் மாஸ்க் தயாரிக்கலாம் வாருங்கள்..!

Published by
Rebekal

பெரும்பாலும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் முகத்தில் உடனடியாக அழுக்கு சேர்ந்து விடுவதாக கவலைப்படுகிறார்கள். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு விரைவில் முகப்பருக்களும் ஏற்பட்டுவிடும். இதற்காக செயற்கையாக கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி உபயோகிப்பதால் நமது பணம் தான் விரையமாகும். ஆனால் முழுமையான தீர்வு கிடைக்காது. இன்று வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கையாக எப்படி எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கான மாஸ்க் தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

எலுமிச்சை + தயிர்

lemonlemon

 

நன்மைகள் : எலுமிச்சை சாறு முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை நீக்குவதிலும் எலுமிச்சை பெரிதும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : இரண்டு ஸ்பூன் தயிரில், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து முகத்தில் தடவவும்.

இடைப்பட்ட காலம் : முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். இதை வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.

கடலை மாவு + தயிர்

Gram FlourGram Flour

நன்மைகள் : எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு கடலைமாவு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இந்த கடலை மாவை முகத்தில் தடவி வந்தால், விரைவில் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கும்.

உபயோகிக்கும் முறை : கடலை மாவுடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல தயாரிக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் பூசிக்கொள்ளவும்.

இடைப்பட்ட காலம் : இதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும். இதனை தினமும் உபயோகிக்கலாம்.

வாழைப்பழம் + எலுமிச்சை

 

நன்மைகள் : முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வாழைப்பழம் உதவுவதுடன், முகத்திற்கு இயற்கையான பளபளப்பு தன்மையை கொடுத்து, முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவதற்கு உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : வாழைப்பழத்தை நன்றாக மசித்து எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்படியே தடவவும்.

இடைப்பட்ட காலம் : இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இதனை வாரம் 2 முறை உபயோகிக்கலாம்.

ஓட்ஸ் + எலுமிச்சை

நன்மைகள் : ஓட்ஸ் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் சிறந்தது. இதனை முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் நீங்குவதற்கும் பெரிதும் உதவுகிறது.

உபயோக்கும் முறை : ஓட்ஸை வெந்நீரில் கலந்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து மாஸ்க் போல தயாரித்து முகத்தில் தடவவும்.

இடைப்பட்ட காலம் : முகத்தில் தடவி 15 முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை சாதாரண தண்ணீரால் கழுவவும்.

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

4 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

4 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

5 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

6 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

7 hours ago