உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களா நீங்கள்…? மருந்து இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

Published by
Rebekal

உயர் ரத்த அழுத்தம் தற்பொழுது உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் கணக்கான மக்களுக்கு உள்ள ஒரு மிகப் பெரிய பாதிப்பாக உள்ளது. இந்த உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக பலர் குறைந்த வயதில் சீக்கிரமாகவே உயிரிழக்க நேரிடுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இதை கண்டறிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்தில் மட்டுமல்லாமல் இயற்கையான முறையிலும் சரி செய்யலாம். அதற்கான சில வழிமுறைகளை நாம் இன்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்

சாதாரணமாகவே மனிதர்கள் ஒரு நாளுக்கு 2,300 மில்லி கிராமுக்கு மேல் சோடியம் பயன்படுத்தக் கூடாதாம். அதிகப்படியான சோடியம் உட்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாம். மேலும் சோடியம் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உட்கொள்ளும் பொழுது பக்கவாதம் ஏற்படுவதற்கு காரணமாகவும் அமையுமாம். எனவே தினமும் நமது உணவுகளில் சோடியம் உட்கொள்ளுதலை குறைத்துக் கொள்ளும் பொழுது இரத்த அழுத்தத்தை 5 முதல் 6 மில்லி மீட்டர் வரை குறைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக உப்பில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.

பொட்டாசியம் உட்கொள்ளுதலை அதிகரித்தல்

உயர் இரத்த அழுத்தத்துடன் போராடக்கூடிய மக்கள் பொட்டாசியம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பொட்டாசியத்தை அதிகளவு நாம் சேர்த்துக் கொள்ளும் பொழுது, இது நரம்பில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது. எடுத்துக்காட்டாக பச்சை இலைக் காய்கறிகள், தக்காளி, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆரஞ்சு, வாழைப்பழம், பாகற்காய், தயிர், வெள்ளை பீன்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் பொட்டாசியம் காணப்படுகிறது.

உடற்பயிற்சி

ஒவ்வொரு மனிதனுமே தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்த உடற்பயிற்சி நமது இதயத்தை வலுப்படுத்த உதவுவதுடன் தமனிகளில் இருக்கக்கூடிய அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம்

 

இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளில் 16 சதவீதத்தினர் குடிப்பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்களாம். எனவே இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் புகைபிடிப்பதையும், குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது.

Published by
Rebekal

Recent Posts

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

2 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

4 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

4 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

5 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

6 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

6 hours ago