சமையலறை சுத்தமாக அழகாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவது வழக்கம் தான். எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் சமயலறையில் இருக்கும் சில பொருட்களால் சின்ன பூச்சிகள் வந்து ஆக்கிரமித்து விடுகிறது. இந்த பூச்சிகளை செலவில்லாமல் ஈசியாக ஒழிப்பதற்கான சில வழிமுறைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் வீட்டிலுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை எடுத்து வெட்டி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கனிந்த வாழைப்பழ துண்டுகள் இரண்டை போட்டு வைத்து கொள்ளவும். அதன் பின் அதை பிளாஸ்டிக் கவர் வைத்து மூடி ரப்பர் பேண்ட் வைத்து கட்டி, சிறு சிறு துளைகள் போட்டு வைக்கவும். இந்த வாசனையில் ஈக்கள் ஈர்க்கப்பட்டு உள்ளே விழுந்துவிடும்.
அதே போல ஒரு திறந்த பாட்டிலில் சிறிதளவு தண்ணீருடன் தேன் கலந்து சுருள் போல போட்டு வைத்து விட்டால் ஈக்கள் அந்த வாசனையிலும் ஈர்க்கப்பட்டு உள்ளே விழுந்து விடும். முடிந்தவரை இனிப்பான பொருட்களை முடிந்த வரை மூடி வைத்து உபயோகியுங்கள், இல்லாத பட்சத்தில் இது போன்ற பாட்டில்கள் மூலம் செலவில்லாமல் ஈக்களை விரட்டியடியுங்கள்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…