நான் வாழ வேண்டுமா? சாக வேண்டுமா? இன்ஸ்ட்டாகிராம் பதிவால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி!
இன்றைய இளம் சமூகத்தினரை இணையதளம் முற்றிலும் அடிமையாக்கிவிட்டது. இந்நிலையில், மலேசியாவில் அடையாளம் தெரியாத சிறுமி ஒருவர், தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், நான் வாழ வேண்டுமா? சாக வேண்டுமா? என்ற பதிவினை பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவிற்கு 69% சதவீதத்தினர் சாக வேண்டும் என பதிலளித்துள்ளார். இந்நிலையில், அச்சிறுமி அதிகமானோர் தன்னை சக வேண்டும் என கூறியதால், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ராம்கோபால் சிங், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சமீப காலமாக அரங்கேறி வரும் இளம் வயதினர் தற்கொலை சம்பவத்தை மிக முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொளல் வேண்டும் என மலேசிய அமைச்சர் சையத் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.