DNA சோதனை செய்யட்டும்…219ஆம் நம்பரில் ரூம் போட்டார்..என்னிடம் வீடியோ உள்ளது..MLA வெற்றிவேல் பகீர் தகவல்…!!

Default Image

அமைச்சர் ஜெயக்குமார் பெண்ணை கற்பமாக்கியது உண்மைதான் என்னிடம் ஆதாரம் உள்ளது என்று  TTV தினகரன் ஆதரவு MLA வெற்றிவேல் கூறியுள்ளார் இது மீண்டும்  பரபரப்பை ஏற்படுத்தினார்.
Image result for அமைச்சர் ஜெயக்குமார்மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணை கற்பமாக்கியுள்ளார் என்று சமீபத்தில் வந்த ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியாது.கூடவே D.ஜெயக்குமார் என்று தந்தையின் பெயரை உள்ளடக்கி குழந்தையின் பிறந்த சான்றிதழும் வெளியாகியது.இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இந்நிலையில் இந்த குற்றசாட்டை அமைச்சர் ஜெயக்குமார் முற்றிலும் மறுத்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த TTV தினகரன் ஆதரவு MLA வெற்றிவேல் அமைச்சர் ஜெயக்குமார் கற்பமாக்கியது உண்மைதான் என்னிடம் ஆதாரம் உள்ளது என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.மேலும் அவர் கூறியதாவது., வெளியான  ஆடியோ பதிவை நாங்கள் தயாரித்து விடணும்னு என்று அவசியம் இல்லை.அந்த  குழந்தையின் பிறந்த சான்றிதழில் உள்ள முகவரிக்கு போய் பாருங்கள் இல்லையென்றால் அந்த குழந்தையின் DNA டெஸ்ட் எடுத்து அமைச்சர் ஜெயக்குமாரின் DNA டெஸ்டையும் எடுத்து பரிசோதித்து பாருங்கள்.அந்த ஆடியோ_வில் இருக்கும் எல்லாமே உண்மை தான் என்னிடமும் அமைச்சரின் மற்றொரு ஆடியோ இருக்கிறது அதை ஆடியோ_வை வெளியீட்டால் அமைச்சர் தூக்குலதான் தொங்கணும் என்று வெற்றிவேல் தெரிவித்தார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சம்மதித்தால் செய்தியாளர் முன்னிலையில் இங்கேயே என்னுடைய செலவில்  DNA சோதனை செய்து பார்ப்போம் உங்களுக்கே உண்மை தெரியும்.ஒரு பொய்யை  திரும்ப திரும்ப சொல்லுற அமைச்சர் ஜெயக்குமார் எத்தனை பெண்களிடம் இப்படி செய்தார் என்று என்னிடம் லிஸ்ட் இருக்கிறது.சொல்லிட்டால் அனைவருடைய குடும்பமும் சீரழிந்து போகும்.நாங்கள் அனைவரும் அம்மா மருத்துவமனையில் இருந்தபோது அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ_வில் உள்ள பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று திண்டுக்கலில் கிராண்ட் ரிவேரா ஹோட்டலில் 219ஆம் நம்பரில் ரூம் போட்டுள்ளார்.அது மட்டுமில்லாமல் அமைச்சர் ஜெயக்குமாரை மாதிரி பலர் உள்ளனர்.அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதுமட்டுமில்லாமல் அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியில் உள்ள பெண்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லறேன் , என்னிடம் இவரை பற்றிய ஆதாரமான வேற ஆடியோ_வும் இருக்கிறது.இவர் எங்களை மாபியா கும்பல் என்று சொல்ல்கிறார் அவர்தான் மாமியா கும்பல்.உடனே அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அமைச்சர் அக்பர் மாதிரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.உண்மையை ஒத்துக்கொண்டு  அந்த குழந்தைக்கு அப்பாவாக இருக்கட்டும் , சொத்தில் பங்கு கொடுக்கட்டும் அதை விட்டுவிட்டு அந்த குழந்தைக்கும் , உயிருக்கும் ஏதும் நடந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.நான் சொல்வது உண்மை தான் என்னிடம் வீடியோ ஆதாரமும் இருக்கிறது எனவே உடனே எடப்பாடி பழனிசாமி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்