விருதுநகரை சேர்ந்தவர் கோபி. இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மகன்களான விமல் மற்றும் விஷவாவுடன் சென்றுள்ளனர். அப்போது அவர் காட்டு பிள்ளையார் கோவில்தெரு பகுதியில் உள்ள பள்ளி குளத்தில் குளிக்க தன் இரண்டு மகன்களுடன் சென்றுள்ளனர்.
அப்போது குளித்துக் கொண்டு இருக்கும் போது விமல்(15) குளத்தில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த விஷ்வா, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளார். இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், விமலை காப்பாற்ற முடியாமல் ஆழத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விமலின் சடலத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…
தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…