10 ஆண்டுகள் நிறைவு பெற்ற மதராசப்பட்டினம் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டது பாலிவுட் நடிகை தான் என்று இயக்குநரான ஏ. எல். விஜய் கூறியுள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மதராசப்பட்டினம். ஆர்யா மற்றும் எமி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ் பையனுக்கும், இங்கிலீஷ் பெண்ணுக்கும் இடையேயான காதலையும், சுதந்திரத்திற்கு முன்னுள்ள காலகட்டத்தையும் கூறும் இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
இதிலுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே இன்றும் பேவரட்டாக உள்ளது. இந்நிலையில் இன்றுடன் 10 ஆண்டுகளான நிலையில், இயக்குநரான ஏ. எல். விஜய் இந்த படத்தினை குறித்த யாரும் அறியாத தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த படத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது எமி ஜாக்சன் இல்லையாம், பாலிவுட் நடிகையான வனேசா ஹெட்ஜன்ஸ் என்று கூறியுள்ளார். Spring breakers மற்றும் Bad boys for life fame ஆகிய படங்களில் புகழ்பெற்ற இவரை தொடர்பு கொள்ள வழியில்லாமையால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. அதனையடுத்து மிஸ் வேல்ட் டீனை வென்றவரான எமி ஜாக்சனின் புகைப்படத்தை பார்த்தாகவும், அவர் ஆடிஷனின் கடைசி நாள் கலந்து கொண்டு படத்தில் இணைந்து கையெழுத்திட்டதாகவும் கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…