ஆலியா பட் அவர்களின் கதாபாத்திரம் மற்றும் பெயரை கூறியுள்ளார் RRR படத்தின் இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி கூறியுள்ளார்.
எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த படத்தின் லோகோ மற்றும் மோஷன் போஸ்ட்ர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும், சமீபத்தில் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் ஆலியா பட் அவர்களின் கதாபாத்திரம் மற்றும் பெயரை கூறியுள்ளார் RRR படத்தின் இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி. அவர் கூறியதாவது, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் போன்ற இரண்டு திறமையான நடிகர்களினிடையில் நிற்க கூடிய ஒரு நடிகை சீதாவின் கதாபாத்திரமாக எனக்கு தேவை. இது ஒரு ட்ரை ஆங்கிள் லவ் ஸ்டோரி இல்லை என்றும். ஒரு அப்பாவி, பாதிக்கப்பட கூடியவர், ஆனால் மிகவும் நெகிழக்கூடியவர் போன்ற பல உணர்வுகளுடன் கூடியவர் தான் சீதாவின் கதாபாத்திரம். அதனால்தான் ஆலியா பட்டிடம் நான் இந்த கதையை கொண்டு சென்றதற்கான காரணம் என்று கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…