பொய்யான செய்தியால் மன உளைச்சலுக்கு ஆளானோம்.! பிடிவாரண்ட் விவகாரம் குறித்து இயக்குனர் ஷங்கர்.!

Published by
பால முருகன்

நீதிமன்றம் தனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக வெளியான செய்தி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இயக்குனர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.சமீபத்தில் எந்திரன் பட விவகாரத்தில் ஷங்கர் பத்து ஆண்டு காலமாக ஆஜராக காரணத்தால் எழும்பூர் நீதிமன்றம் இயக்குனர் ஷங்கர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்து அறிக்கை ஒன்றை ஷங்கர் வெளியிட்டுள்ளார்.அதில் எழும்பூர்‌ நீதிமன்றம்‌ எனக்கு எதிராக பிடி வாரண்ட்‌ பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப்‌ பார்த்து நான்‌ அதிர்ச்‌சியடைந்தேன்‌. எனது வழக்கறிஞர்‌ திரு.சாய்‌ குமரன்‌, நீதமன்றத்தை இன்று அணுகி இந்தச்‌ செய்தி குறித்து அவர்களின்‌ கவனத்துக்கு கொண்டு சென்றார்‌. எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும்‌ பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்‌.

இணையத்தில்‌ தினசரி நீதிமன்ற வழக்குகளின்‌ நிகழ்வுகள்‌ பதிவேற்றுதலில்‌ நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல்‌ இப்படி ஒரு பொய்யான செய்‌தி உலவுவதைப்‌ பார்க்க ஆச்சரியமாக இருக்கறது. ‘இந்த விஷயம்‌ எனது குடும்பத்துக்கும்‌, நல விரும்பிகளுக்கும்‌ தேவையில்லாத மன உளைச்சலைத்‌ தந்துள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள்‌ இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும்‌ பகிரவேண்டும்‌ என்று தயவுகூர்ந்து அன்‌போடு கேட்டுக்கொள்கிறேன்‌ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“தேர்தலில் வெற்றி பெற விஜய் ‘இதை’ செய்ய வேண்டும்” பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!

“தேர்தலில் வெற்றி பெற விஜய் ‘இதை’ செய்ய வேண்டும்” பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!

மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…

12 hours ago

INDvENG : இங்கிலாந்தை சுழற்றிய ஜடேஜா! இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…

13 hours ago

விராட் கோலிக்காக ‘பலிகடா’ ஆக்கப்பட்டாரா ஜெய்ஸ்வால்? ரசிகர்கள் அதிருப்தி!

கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…

14 hours ago

அஜித் ரசிகர்களுக்கு அடுத்த ‘ஷாக்’! போர்ச்சுகல்லில் கார் விபத்தில் சிக்கிய AK!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…

16 hours ago

INDvENG : மீண்டும் அதையே செய்த இங்கிலாந்து கேப்டன்! பந்துவீசி வரும் இந்திய அணி!

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…

17 hours ago

“கல்வியின் கழுத்தை நெறிக்கும் இரக்கமற்ற பாஜக அரசு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…

17 hours ago