விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் மற்றும் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட் செய்வதாக திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பரபரப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருந்த 800 படத்தில் நடப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது.
மேலும் இதற்கு சினிதுறை மட்டுமின்றி அரசியல் வட்டத்திலும் எதிர்ப்புகள் அதிகரித்தது.எதிர்ப்பு வலுக்கவே முத்தையா முரளிதரன் இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்கு கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் படம் கைவிடப்பட்டது.நன்றி வணக்கம் என்று நடிகர் விஜய்சேதுபதி ட்விட் செய்தார்.இவ்வாறு சர்ச்சைகளால் முடிந்த நிலையில் தற்போது இயக்குநர் சீனுராமசாரி செய்தியாளர் சந்திப்பில் விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது.
அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட் செய்கின்றனர் என்று பரபரப்பு தெரிவித்தார்.மேலும் அவர் விஜய்சேதுபதி நலன் கருதியே 800 திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினேன்.
விஜய்சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிவுறுத்தினேன்.இது தொடர்பாக எனது கருத்தை தெரிவித்தேன்
ஆனால் விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்தேன் என்று தொடர்ந்து எனக்கு மிரட்டல் வருகிறது. மிரட்டலில் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட் செய்கின்றனர் என்று இயக்குநர் சீனுராமசாமி வேதனை தெரிவித்தார்.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…