இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.!!

Published by
பால முருகன்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக் குறைவால் கடந்த 11 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

தமிழ் சினிமாவில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற பல சிறந்த படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து லாபம் என்ற படத்தை இயக்கி வந்தார்.

இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி வியாழன் கிழமை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். நீண்ட நேரம் கடந்தும் எஸ்.பி.ஜனநாதன் மீண்டும் பணிக்கு வரவில்லை என்பதால் அவரின் உதவியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது எஸ்.பி.ஜனநாதன் சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த உதவியாளர்கள் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (மார்ச் 14) காலை எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீரென்று மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பலனின்றி காலை 10 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 61.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago