பிரஸ் மீட்டில் உளறிய இயக்குனர் ஜான்சன் கே .! சமாளித்த சந்தானம்.!

Published by
Ragi

பாரிஸ் ஜெயராஜ் படத்தின் புரோமோஷனுக்காக நடைபெற்ற பிரஸ் மீட்டில் இயக்குனர் உளறியதாகவும் ,அதனை சந்தானம் சமாளித்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தை இயக்குனர் ஜான்சன் கே இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதை தொடர்ந்து அதன் புரோமோஷனுக்காக பாரிஸ் ஜெயராஜ் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள் .இதில் இயக்குனர் வரமாட்டார் என்றும், ஏனெனில் வரும் வழியில் இயக்குநரின் கார் விபத்தில் சிக்கியதாகவும் நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே அறிவித்திருந்தார்கள்.

ஆனால் நிகழ்ச்சி முடிவதற்கு முன் அரங்கிற்கு வந்து பேசிய இயக்குநர் ஜான்சன் கே, பத்திரிகைகளிடம் பேசுகையில் தெளிவாக இல்லை என்றும் ,உளறி கொண்டு தான் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.அதிலும் அவர் நான் ஒர்த் இல்ல என்று வார்த்தையையே மீண்டும் மீண்டும் கூறி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி படத்தின் ஹீரோயினான அனைகாவின் பெயரை ஆயா உள்ள பாட்டி என்று கூறியதும் ,அதனை தொகுப்பாளர் திருத்தியதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு படக்குழுவினர் பெயரை கூற சரியாக கூறாமல் உளறி கொண்டிருந்த இயக்குனர் மீண்டும் மீண்டும் நான் ஒர்த் இல்ல என்று கூறிய போது பத்திரிக்கையாளர் தரப்பிலிருந்து நீங்கள் ஒர்த் இல்ல ஒர்த் இல்லனு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே, மக்களும் படம் ஒர்த் இல்லனு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க என்று கேள்வி கேட்டனர்.அதற்கு யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக போகட்டும் எனக்கு கவலை இல்லை என இயக்குனர்பதில் அளித்துள்ளார்.உடனடியாக சுதாரித்து கொண்ட சந்தானம், இயக்குனரின் கார் விபத்துக்கு உள்ளானதால் குழப்பத்தில் உள்ளார் என்று கூறி சமாளித்துள்ளார் . இயக்குனரின் இந்த செயல் அனைவரையும் முகம் சுருங்க வைத்துள்ளது . இயக்குனரின் கார் விபத்தில் சிக்கியதற்கும் ,அவர் பேட்டியில் உளறி கொட்டியதற்கும் காரணம் என்னவாக இருக்கும் என்று பலர் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

10 hours ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

10 hours ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

12 hours ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

12 hours ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

13 hours ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

13 hours ago