வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்து படமாக்க உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் அந்த படம் தொடங்க ஒரு வருடம் காத்திருந்தால் தான் நடைபெறும். ஏனென்றால் விஜய் சேதுபதி கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்பட ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கிடையில் தற்போது சசிகுமாரிடம் ஒரு கதையைக் கூறி அதற்கான பூஜையும் போட்டு படஷூட்டிங்கை தொடங்கிவிட்டார் இயக்குனர் பொன்ராம்.
இப்படத்தில் நாயகனாக சசிகுமாரும் நாயகியாக மிருளானியும் நடிக்க உள்ளனர். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. இப்படம் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தான் எம்.ஜி.ஆர்.மகன் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…