இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். டிமான்டி காலனி. திகில் கலந்த கதையை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
இந்த திரைப்படத்தில் ஆர்ஜ் ரமேஷ், கலையரசன், எம்எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, யோகிபாபு, அருண்ராஜா காமராஜ், என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் கேபா ஜெர்மியா பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். பின்னணி இசை எசு. சின்னா இசையமைத்திருந்தார்.
இப்படத்தை பார்த்த அனைவருக்கும் திரில்லர் அனுபவம் கொடுத்து இருக்கும். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து கோப்ரா திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…