நடிகர் சுஷாந்தை தொடர்ந்து ‘தோனி’ பட நடிகர் தற்கொலை.! சோகத்தில் திரையுலகம்.!

Default Image

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து தோனி படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களைடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே தோனி படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பையில் உள்ள கோரேகான் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சந்தீப் நஹர் தனது வீட்டிலையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ,தனது தொழில்துறை பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் தனது இந்த முடிவிற்கு மனைவியை குறை கூற கூடாது என்றும் வீடியோவில் கூறியுள்ளார்.ஒரே படத்தில் நடித்த இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நடிகரின் தற்கொலைக்கு பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman