Breaking: இந்திய அணிக்கு பின்னடைவு ! உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவன் விலகல்

Default Image

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய  அணியின் நட்சத்திர வீரர் ஷீகர் தவன் விலகியுள்ளார் .
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன்  சிறந்த வீரர் ஆவார்.ஆனால் இந்த ஆண்டு மட்டும் ஒரு நாள் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை.குறிப்பாக உலக கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் தவன் சிறப்பாக விளையாடவில்லை.ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் தனது ஆட்டத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.அதற்கு ஏற்றவாறு உலக கோப்பையின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது.இந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் தவன் அடித்த 117 ரன்கள் தான்.தவானின் இந்த ஆட்டம் தான் மற்ற பேட்ஸ்மன்களை  சிறப்பாக விளையாட வைத்தது.அதன்படி இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்தவுடன் இந்திய அணி வருகின்ற 13 ஆம் தேதி நியூ சிலாந்து அணியுடன் மோதவுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடும் போது  இந்திய அணி நட்சத்திர வீரர் தவனுக்கு காயம் ஏற்பட்டது.இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.காயம் குறித்து பரிசோதித்த இந்திய அணி மருத்துவ குழு 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய  அணியின் நட்சத்திர வீரர் ஷீகர் தவன் விலகியுள்ளார். இதனால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin about CentralGovt
Rohit Sharma CT
Girl sexually harassed
Virat Kohli shubman gill
kumbh mela fire accident
Sexual Harassment - Pregnant Woman