கர்ணன் படத்திற்காக மூன்றாவது முறையாக நடிகர் தனுஷ் தேசிய விருது வாங்குவார் என்று நடிகர் நட்டி நடராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன், நட்டி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் தற்போது படத்தின் நான்காவது பாடலான கர்ணனின் யுத்தம் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலும் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கான இசைவெளியிட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, யுகபாரதி, யோகி பாபு, நடராஜன் நட்டி, கௌரி கிஷன் போன்ற பலர் கலந்துகொன்டுள்ளார்கள்.
இந்த விழாவில் பேசிய நடிகர் நட்டி நடராஜன் ” இந்த படத்திற்காக மூன்றாவது தேசிய விருது கலைப்புலி தாணுவிற்கும், நடிகர் தனுஷிற்கும் மூன்றாவது தேசிய விருது வாங்குவார். அதைபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் வாங்குவார் எல்லாரும் இணைந்து படத்தை தயார் செய்திருக்கிறார்கள் இசை சந்தோஷ் நாராயணன் பின்னருக்காரு. என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக…
மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை…
சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் "தவறான ஆட்டத்தை…
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…