தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது
இந்த படம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாகவோ, அல்லது ஆடுகளம் படத்தின் கதையை போல் இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய வெற்றிமாறனுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் டுவிட்டர் பக்கத்தில் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த போது ரசிகர் நீங்கள் தனுஷ் – வெற்றிமாறன் படத்தை தயாரிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்ப, அவரும் ஆமாம் என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் என்பது உறுதியாகியுள்ளது.
தற்போது நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ்க்காக செம வெயிட்டிங்கில் உள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படமும், இந்தியில் ஒரு படமும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று வெற்றிமாறன் சூரி அவர்களை வைத்து சிறிய பட்ஜெட் படமும், சூர்யாவின் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கவுள்ளார்.இதில் சூரி படத்தை எல்ரெட் குமார் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தொடர்ந்து தனுஷின் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…