நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் கடைசியாக ஜகமே தந்திரம், மாறன் ஆகிய இரண்டு படமும் ஓடிடியில் வெளியானது.
இதனால் தனுஷ் ரசிகர்கள் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படம் நானே வருவேன். ஏனெனில் செல்வராகவன் – தனுஷ் -யுவன் கூட்டணி என்பதால். மேலும், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ், அடுத்ததாக ஒரு திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் டிவி ராமர் மற்றும் நடிகர் ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து ரோபோ சங்கர் கூறியது ” தனுஷ் சார் இயக்கத்தில் ராமர் ஐயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்..நானும் அவருடன் நடிக்கிறேன்” என கூறியுள்ளார்.
இதற்கு முன்பு நடிகர் தனுஷ், பா.பாண்டி என்ற படத்தை நடிகர் ராஜ்கிரணை வைத்து பா.பாண்டி என்ற படத்தை இயக்கிருந்தார். அந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…