வடசென்னை திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம்-தனுஷ் ..!

Default Image

நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் “அசுரன்” படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன் பொல்லாதவன் ,  ஆடுகளம் , வடசென்னை ஆகிய படங்களை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மஞ்சுவாரியர் ,பிரகாஷ்ராஜ்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை எஸ். தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில்  “அசுரன்”  படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் , வடசென்னை திரைப்படத்திற்கு தேசிய விருது  கிடைக்காதது வருத்தம் தான் கலை இயக்குனர் ஜாக்சனுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்.மேலும் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களின் கலைஞர்கள் தேசிய விருது கிடைத்து இருக்க வேண்டும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்