நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவிக்கு மொபைல் இல்லாமல் அவதிப்பட்டதால், அவருக்கு ஐபோன் வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் டாப்ஸி.
ஊரடங்கால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் பலருக்கு பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான டாப்சி, மாணவி ஒருவருக்கு ஐபோன் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அதற்கு மொபைல் கூட வாங்க இயலாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்கள் பலர் உள்ளனர்.
அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பை முடித்து விட்டு நீட் தேர்வுக்காக தயாராகி வருகிறார். அவரது கல்வி கட்டணத்தை பெற்றோர்கள் நகை அடமானம் வைத்து தான் கட்டியுள்ளார்களாம். ஆனால் நீட் தேர்வுக்கு தயாராக ஸ்மார்ட்போன் இல்லாமல் அவதிப்பட்டு வந்த மாணவிக்கு நடிகை டாப்சி உதவியுள்ளார். ஆம் ஸ்மார்ட்போன் வாங்க வழி இல்லாமல் இருந்த அந்த மாணவிக்கு ஐபோன் வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து டாப்ஸி கூறுகையில், பெண்கள் அதிகம் படிக்க வேண்டும், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும். நமக்கு அதிகமான டாக்டர்கள் அவசியம். அதற்காக இது என்னுடைய சிறு முயற்சி என்று கூறியுள்ளார். தற்போது இவரது இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…