பாலிவுட் நடிகை சாரா அலிகான் அவர்களின் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சமீபத்தில் கூட பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மட்டுமின்றி நடிகை ரேகாவின் வீட்டில் பணியாற்றி வந்த காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சாரா அலிகானின் குடும்பத்தில் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவரது டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் உடனடியாக தனிமைப்படுத்தல் முகாமில் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாரா அலிகான் தற்போது அக்ஷய் குமார் மற்றும் தனுஷூடன் இணைந்து ‘அத்ராங்கி ரே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…