கொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த மருந்தை கொரோனவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது.
இதனைதொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள், “டெக்ஸாமெதோசான்” என்ற மருந்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள், கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் இந்த மருந்து குணப்படுத்துகிறது எனவும், சுவாசிக்கத் திணறும் நோயாளிகளில் 5ல் ஒருவருக்கு நல்ல பலனைத் தருகிறது என நடத்திய ஆய்வு மூலம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், “டெக்ஸாமெதோசான்” மருந்தை கொரோனவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…