பாடல்:
முத்தென்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் ற்ல்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ?
எந்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!
பாடல் விளக்கம்:
எழுப்புபவர்:
முத்தினை போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ, எங்களுக்கு முன் வந்து எங்கள் எதிரே வந்து ” என் அன்பனே! ஆனந்தனே! அமுதனே!” என்று வாயூரி இனிக்க இறைவனை புகழ்வாய்! எழுந்து வந்து உன் வாசற் கதவைத் திற!
உள்ளே இருப்பவள்:
நீங்கள் இறைவனிடம் பற்ற்றுடையவர்கள்: இறைவனுடைய பழைய அடியார்கள்: அவனைப் புகழும் முறைமை பெற்றவர்கள். நான் புதிய அடிமை! உங்கள் பெருமயால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட் கொள்ளலாகாதோ?
எழுப்புபவர்:
உன் அன்புடைமை எங்க்களுக்கு தெரியாதா? அதை எல்லோரும் அறிவோம். அழகிய மனம் உடையவராகிய நம் சிவபெருமானை பாடாமலிருப்பாரோ? உன்னை எழுப்ப வந்தோமோ நாங்கள், எங்க்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்?
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…