பாடல்:
முத்தென்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் ற்ல்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ?
எந்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!
பாடல் விளக்கம்:
எழுப்புபவர்:
முத்தினை போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ, எங்களுக்கு முன் வந்து எங்கள் எதிரே வந்து ” என் அன்பனே! ஆனந்தனே! அமுதனே!” என்று வாயூரி இனிக்க இறைவனை புகழ்வாய்! எழுந்து வந்து உன் வாசற் கதவைத் திற!
உள்ளே இருப்பவள்:
நீங்கள் இறைவனிடம் பற்ற்றுடையவர்கள்: இறைவனுடைய பழைய அடியார்கள்: அவனைப் புகழும் முறைமை பெற்றவர்கள். நான் புதிய அடிமை! உங்கள் பெருமயால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட் கொள்ளலாகாதோ?
எழுப்புபவர்:
உன் அன்புடைமை எங்க்களுக்கு தெரியாதா? அதை எல்லோரும் அறிவோம். அழகிய மனம் உடையவராகிய நம் சிவபெருமானை பாடாமலிருப்பாரோ? உன்னை எழுப்ப வந்தோமோ நாங்கள், எங்க்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்?
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…