ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு;காவல் அதிகாரிக்கு 22.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!

Published by
Edison

ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 48) என்ற கறுப்பினத்தவர், கள்ள நோட்டு வைத்திருந்ததாக கூறி அவரது கழுத்தில்  காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் முழங்காலை வைத்து அழுத்தினார்.இதனால் மூச்சுவிட முடியவில்லை என்று பிளாய்ட் கெஞ்சியும் அதிகாரி தனது காலை எடுக்கவில்லை.இதன்காரணமாக,மூச்சுத்திணறி பிளாய்ட் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,காவல்துறை அதிகாரி இனவெறியுடன் நடந்து கொண்டதாக பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்,பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து,ஜார்ஜ் ஃபிளாய்ட் குடும்பத்தினர்,காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் உட்பட நான்கு பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மினசோட்டா நீதிபதி பீட்டர் காஹில்,”ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலைக்காக காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,நீதிபதி கூறுகையில்:”இந்த தண்டனை உணர்ச்சி அல்லது பொதுக் கருத்தின் அடிப்படையில் அமைந்ததல்ல.ஃபிலாய்ட் குடும்பத்தினர் உணரும் ஆழ்ந்த மற்றும் மிகுந்த வேதனை புரிகிறது. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரி சாவின் தனது நம்பிக்கை,அதிகாரத்தின் நிலையை துஷ்பிரயோகம் செய்தார் மற்றும் பிளாய்டை கொடுமையுடனும், மரியாதை இல்லாமலும் நடத்தினார், மேலும் எல்லா மனிதர்களுக்கும் கொடுக்க வேண்டிய கண்ணியத்தை அவருக்கு கொடுக்க மறுத்தார்.

எனவே,கொலை குற்றமும், பிற குற்றங்களும் சுமத்தப்பட்ட சாவின் தனது வாழ்நாள் முழுவதும் துப்பாக்கியை வைத்திருப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,45 வயதான சாவின் சிறையில் கண்ணியமாக நடந்து கொண்டால், தனது மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவித்தபின் பரோலில் விடுவிக்கப்படுவார்”,என்று தெரிவித்தார்.

 

Published by
Edison

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

25 mins ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

8 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

8 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

8 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

8 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

8 hours ago