உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகள் தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளது. கொரோனா தொற்றுநோயை தடுக்க தடுப்பூசி போட தொடங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தடுப்பூசியை போடும் பணி பிரிட்டனில் தற்பொழுது தொடங்கியது. இந்த தடுப்பூசியை இந்தியாவிலும் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை தனது தளத்திலிருந்து நீக்குவதாக சமூக ஊடக தளமான ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ட்விட்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை ட்விட்டர் தளத்திலிருந்து அகற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் விளைவுகள் குறித்த பதிவுகள், தடுப்பூசி மக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ பயன்படுத்தப்பட்டது என்று ஆதாரமற்ற தகவலை வெளியிடுவது போன்றவற்றை நீக்குவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் வரும் புதன்கிழமை (டிசம்பர் 23) முதல் செயல்படுத்தும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை நீக்குவதாக பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்களும் ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…