தீபாவளி ஸ்பெஷலாக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு.!கண் கலங்கும் சம்யுக்தா, அர்ச்சனா.!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களுக்கு பிடித்த ஒரு நபருக்கு கடிதம் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் இருப்பதை போன்று சந்தோஷமான தினங்களும், அழுகை என அனைத்து உணர்வுகளையும் கொண்டது தான் பிக்பாஸ்.  இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் இந்த வார நாமினேஷனில் கேப்ரில்லா , ரம்யா,  அர்ச்சனா, சம்யுக்தா, பாலாஜி, ஆஜித், அனிதா, சுசித்ரா ஆதியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது . 15 போட்டியாளர்களில் 9 பேர் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் தீபாவளி தினத்தை முன்னிட்டு போட்டியாளர்கள் வெளியில் இருக்கும் தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பிக்பாஸ் போட்டியாளர்கள் தீபாவளி பண்டிகையை பிக்பாஸ் குடும்பத்துடன் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக இந்த வீட்டில் கொண்டாடவுள்ளனர். அப்படி இந்த பண்டிகையை போட்டியாளர்கள் யாருடன் சேர்ந்து கொண்டாட விரும்புகிறார்களோ அந்த ஒரு நபருக்கு கடிதம் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு பிடித்த நபருக்கு கடிதம் எழுத சம்யுக்தா, அர்ச்சனா உள்ளிட்ட பலர் அழுகின்றனர் .இதோ அந்த வீடியோ

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்